ஒளியை நோக்கிய பயணம்

ஹரி ஓம் ❤

இந்த மந்தன் கிரியா பாதையில் நான் 2 வருடங்களுக்கு முன்பு ஸ்ரீ குருவுடன் தொடங்கினேன். ஆனால் எனது உண்மையான தேடல் நீண்ட காலமாக நடந்து வருகிறது. நான் சிறு குழந்தையாக இருந்த காலத்திலிருந்தே என்னவென்று தெரியாமல் எதையோ தேடிக்கொண்டே இருந்தேன்.

எனக்கு சுமார் 10 வயதாக இருந்தபோது உண்மையிலே நான் யார் என்று தேடும் கனவு கண்டேன். நான் ஒரு அறைக்குள், ஒன்றன் பின் ஒன்றாக பல கதவுகளை திறந்து கொண்டடே இருந்தேன். ஒவ்வொரு கதவும் மேலும் மேலும் பல அறைகலுக்கு இட்டுச் சென்றது, ஆனால் நான் யார் என்று கண்டுபிடிக்கவே முடியவில்லை. அந்தக் கனவு என்னுடன் பல வருடம் பிண்பும் இருந்தது. நான் எப்போதும் எண்ணை தேடுவது போல் உணர்ந்தேன், ஆனால் அந்தக் கேள்விக்கான பதில் கிடைக்கவில்லை.

எனது அமைதியின்மைக்கான பதில் குடும்பத்திலும், சில அர்த்தமுள்ள வேலைகளைக் கண்டறிவதிலும், சுற்றுலா பயணத்திலும் இருப்பதாக நான் நினைத்தேன். அதனால் அடுத்த சில வருடங்களில் இக்காறியங்களிள் ஈடுப்பட்டேன். எனக்கு ஒறு அழகான குடும்பம் மற்றும் 2 அருமையான குழந்தைகள் கிடைத்து. இன்னும் அமைதியின்மை மற்றும் மகிழ்ச்சியின்மை தொடர்ந்தது. உண்மையில் என்ன காரணம் என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

கோவிட் தொற்றுநோய் தொடங்கியதும், அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தபோது, எனக்கு சிறிது நேரம் கிடைத்தது.

தியானம் செய்ய வேண்டும் என்று தோன்றியது. நான் தினமும் அதில் ஈடுபட்டேன். அதை தவறாமல் செய்ய ஆரம்பித்தேன், மெதுவாக அதிக அமைதியை அனுபவித்தேன். ஒவ்வொரு நாளும் அதைச் செய்வதற்கான இழுவை நான் உணர்ந்தேன் மற்றும் எனது மூலதாரா சக்கரத்தில் சில அதிர்வுகளை அனுபவிக்க ஆரம்பித்தேன், அது மிக விரைவில் தன்னிச்சையான இயக்கங்களாக மாறியது.

பாம்பைப் போல அசைவதையும், என் தலையையும் முழு உடலையும் வட்டமாக நகர்த்துவதையும் நான் அனுபவிக்க ஆரம்பித்தேன்.

இதன் பொருள் என்னவென்று தெரியாமல் முதலில் எனக்கு பயமாக இருந்தது. இதைப் பற்றிய எந்தத் தகவலும் இணையத்தில் தேட ஆரம்பித்தேன். என்னால் அதிகம் கண்டுபிடிக்க முடியவில்லை. மிகக் குறைந்த தகவல்கள் மட்டுமே கிடைக்கின்றன, மேலும் நான் கண்டறிந்த பெரும்பாலானவை இது செயல்முறையின் ஒரு பகுதியாகும். ஆனால் அதை எப்படி சமாளிப்பது என்பது குறித்து யாரும் தகவல் தரவில்லை.

இந்த நேரத்தில் எனக்கு வழிகாட்டியாக இருந்த போகநாதர் குருவுடன் எனக்கும் தொடர்பு இருந்தது. ஆனால் எனக்கு வழி காட்டும் ஒரு உடல் குரு தேவை என்று உணர்ந்தேன். எனவே நான் பிரார்த்தனை செய்து ஒரு குருவைக் கேட்டேன். நான் யாரிடம் பிரார்த்தனை செய்தேன் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் நான் கேட்டுக் கொண்டே இருந்தேன்.

இறுதியாக ஒரு நாள் நான் தேடிக்கொண்டிருந்தபோது ஸ்ரீ குருவின் யூடியூப் வீடியோவைக் கண்டேன். அதில் அவரின் தன்னிச்சையான அசைவுகளைக் காட்டி அதை விளக்குவதைக் கண்டேன். நான் அனுபவித்த அதே அசைவுகள் தான் அவர் காட்டியது.

உடனே அவருடைய இணையதளத்தைப் பார்த்துவிட்டு அவருக்கு மெசேஜ் அனுப்பினேன். இந்த பாதையில் எனது பயணத்தின் தொடக்கமும் அதுதான்.

இந்த பாதையில் நான் அளவிளா அன்பையும் மகிழ்ச்சியையும் அனுபவித்திருக்கிறேன். என்னுள் பல மாற்றங்கள் தன்னிச்சையாக நிகழ்ந்தன, பல தெய்வீக அனுபவங்கள் நடந்தன. ஸ்ரீ குரு வின் வழிகாட்டுதலின் கீழ் ஒரு அற்புதமான பயணம், நமது உண்மையான தன்மையை நோக்கிய பயணம்.

குருவின் மலர் பாதங்களே சரணம்

❤ 🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *